வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 13:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா மலைக்குடிப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தின் அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் வேகமாக வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்