தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-02-04 12:54 GMT

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பாலத்துறை பகுதியில் ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து அதில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ண கோடுகளை அடித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்