கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2024-01-28 17:20 GMT
சேத்தியாத்தோப்பில் இருந்து அகரஆலம்பாடி வழியாக விருத்தாசலத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அகரஆலம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களது சொந்த வேலை காரணமாக விருத்தாசலம் மற்றும் சேத்தியாத்தோப்பு சென்று வர கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட வழியாக கூடுதல் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்