போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-28 15:49 GMT

கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் சென்னை செல்லும் சாலை, பெங்களூரு செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை ஆகிய 3 சாலைகளும் சந்திக்கும் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் இருந்து தேவசமுத்திரம், முல்லை நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல நீண்டநேரம் ஆகிறது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். அந்த பகுதியில் சிக்னல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்