பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-01-28 11:40 GMT

சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் இரு புறங்களிலும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் இடையூறாக நிறுத்தி வைத்துள்ளனர். நடுரோட்டில் கார்களை நிறுத்திவிட்டு செல்வதால் வேறு வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்