நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2024-01-21 16:12 GMT

புதுவை இந்திராகாந்தி சிலை சதுக்கம் பஸ் நிறுத்தும் அருகில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்