அந்தியூரில் இருந்து அத்தாணி, கணக்கம்பாளையம் வழியாக டி.என்.பாளையம் மற்றும் கோபி செல்வதற்கு ஏ20 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. இது கடந்த 2 மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி மீண்டும் ஏ20 டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?