சென்னை பல்லவபுரம், பஸ் நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் அமர முடியாத நிலை உள்ளது. மேலும், குப்பைகள் அதிகமாக இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்றி, பஸ் நிறுத்தத்தை பராமாிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.