பஸ்களுக்கு தனி கவுண்ட்டர் தேவை

Update: 2024-01-14 18:56 GMT

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர்- பெங்களூரு பகுதிகளுக்கு செல்கின்றன. அதேபோல அங்கிருந்து ஏராளமான வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கார்கள் இந்த சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் வருவதால் பஸ்களில் பயணம் செய்ய கூடிய பயணிகளும சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே இந்த சுங்கச்சாடியில் இருபுறமும் பஸ்களுக்குகென்று தனி கவுண்ட்டர் அமைக்க வேண்டும்.

- பிரவீன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்