பஸ் வசதி தேவை

Update: 2024-01-14 15:36 GMT

பெருந்துறையில் இருந்து அந்தியூர் சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பயணம் செய்பவா்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தியூரில் இருந்து சிப்காட் தொழில் நிறுவனங்களூக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனா். பெருந்துறையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே பெருந்துறையில் இருந்து பெத்தாம்பாளையம், கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் வழியாக அந்தியூர் செல்வதற்கு புதிய வழி தடத்தில் பஸ் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட ஈரோடு மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்