கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

Update: 2024-01-14 11:42 GMT

சென்னை அண்ணாநகர், ரவுண்டானா அருகில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நடைபாதை ஓரத்தில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அவை துருப்பிடித்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் நடைபாதையில் செல்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் சிரமத்தை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்