பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும்

Update: 2024-01-14 11:41 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம், பன்னாங்கொம்பு அருகே ஊரணி குளத்தின் அருகில் உள்ள மேற்கு களம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னாங்கோம்பு பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கு களம் பகுதிக்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்