சென்னை தியாகராய நகரில் வேங்கட நாராயண பஸ் நிறுத்தும் உள்ளது. இந்த பஸ் நிறுத்ததின் முன்பு அந்த பகுதிக்கு வருபவர்கள் கார்களை நிறுத்து விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிறுத்ததில் பஸ்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகளை கார்கள் அதில் நிறுத்துவதால் சில பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.