லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-07 14:30 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நகருக்கு மிக அருகாமையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியின் அருகில் சாலையின் இருபுறமும் லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கச்சாவடி அருகில் கடந்து செல்லும் போது ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையின் இருபுறமும் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்