சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், என அனைவரும் அவதிப்படுகிறார்கள், மாநகர பேருந்து இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு செல்ல சிரமமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?