சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-12-31 13:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர பகுதியில் பெரியகடைவீதி, எம்.ஜி.ஆர். சிலை, வாகை மரம், காரைக்குடி- புதுக்கோட்டை சாலை செக்போஸ்ட், பொற்கொடையார் கோவில் சாலை, அறந்தாங்கி பேராவூரணி சாலை, கட்டுமாவடி சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்