அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-12-24 15:16 GMT

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு ‘8இ’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த பஸ்சை நிறுத்திவிட்டதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அனைவரது நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்