மயான பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-12-17 10:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, மதயானைப்பட்டி கிராமத்தின் தெற்கு தெருவில் மயான பாதை உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கழிவறை கட்டியும், வைக்கோல் போர் வைத்தும், கம்பி வேலி போட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை அப்பாதை வழியே கொண்டு செல்லும்போது பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே மதயானைப்பட்டி கிராமத்தின் தெற்கு தெருவில் உள்ள மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்