பஸ்வசதி தேவை

Update: 2023-12-10 18:03 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூரில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் ஒகையூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால், சாத்தனூரில் இருந்து ஒகையூர் செல்ல பஸ்வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பஸ்வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்