பராமரிப்பில்லாத பயணிகள் நிழலகம்

Update: 2023-12-03 10:08 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பயணிகள் நிழலகம் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பயணிகள் நிழலகத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், பயணிகள் நிழலகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தரைத்தளம் மற்றும் இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. ஒருசிலர் பயணிகள் நிழலகத்துக்குள் குப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் வீசி குப்பை கூளம் போல பயணிகள் நிழலகத்தை மாற்றி உள்ளனர். இதனால் பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை சுத்தம் செய்யவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்