போக்குவரத்து நெரிசல்

Update: 2023-11-26 17:13 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் சரக்கு லாரிகளை வாரக்கணக்கில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் சரக்கு லாரி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நாராயணசாமி, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்