பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-11-26 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையத்திற்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் பஸ்கள் வந்து சென்றாலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகவே பஸ்கள் வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூளகிரி பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்கள் பெரும்பாலும் வருவதில்லை. அரசு பஸ்களும் குறைவாகவே வருகின்றன. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். ஒரு சில பஸ்களும், பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே சூளகிரி பகுதிக்கு பஸ்கள் வந்து செல்லவும், இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்