பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 13:10 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணணூர் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் பெரிய ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்து தான் விவசாயிகள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கால்நடைகள் செல்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது, மழை காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் சூழ்ந்து கொண்டு இருக்கும். இதனால் ஆற்றைக் கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்