கிடப்பில் போடப்பட்ட பஸ் நிழற்குடை

Update: 2023-10-15 14:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் , அஸ்தினாபுரம் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆனால் கான்கீரிட் தரை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் வெங்ட்ராம நகரிலிருந்து இயக்கப்படுகிறது. எனவே, பஸ்ஸில் செல்வோர் நீண்ட தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை சீக்கிமாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்