ஆபத்தான பயணம்

Update: 2023-10-04 13:24 GMT


தஞ்சை மாவட்டம் திட்டை பகுதிக்கு சரியான நேரத்தில் பஸ்கள் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.இதனால் ஒரு சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டை, கார்த்திகேயன்

மேலும் செய்திகள்