தென்மாவட்டங்களுக்கு இரவு நேரம் கூடுதல் பஸ் சேவை

Update: 2023-10-04 09:51 GMT


திருப்பூர் கோவில் வழியில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராஜபாளையத்திற்கு இரவு 11.15 மணிக்கு பிறகு பஸ் இல்லை. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் வேலை பார்ப்பதால் அவர்கள் வேலை முடிந்து சொந்த ஊர் செல்ல நேரடி பஸ் சேவை இல்லை. இதனால் சிரமப்படுகிறார்கள். எனவே நேரடி பஸ் சேவை இயக்கினால் தென்மாவட்ட மக்கள் பயன்அடைவார்கள்.


மேலும் செய்திகள்