நடுவீரப்பட்டு அடுத்த பாலூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.