வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ரெயில் பயணிகளுக்கு போதிய நிழற்கூட வசதி இல்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரெயில் பயணிகளுக்கு நிழற்கூட வசதியை ஏற்படுத்தி கொடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியன் ரவி, ராணிப்பேட்டை.