விக்கிரவாண்டி அருகே சித்தேரிப்பட்டு, வெள்ளேரிப்பட்டு, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?