அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-08-18 20:29 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் புதிய தாலுகாவாக உருவாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சேத்துப்பட்டு, வந்தவாசி போன்ற ஊர்களுக்கு செல்கிறார்கள். அதேபோல் சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பலர் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதிகளுக்கு செல்கிறார்கள். ஆகையால் கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு வழியாக அவலூர்பேட்டை வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும்.

-கே.விக்ரம், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்