அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-02-25 12:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஜமுனாமரத்தூரில் இருந்து போளூர் செல்ல அரசு பஸ் தடம் எண்:777 அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படுகிறது. அதன் பின்பு காலை 8.30 மணிக்கு மற்றொரு பஸ் போளுர் செல்கிறது. இதன் இடைப்பட்ட நேரத்தில் காலை 7.30 மணிக்கு ஒரு அரசு பஸ் இயக்கினால் அலுவலகத்துக்கு செல்லும் அரசு அலுவலர்கள், போளூர் செல்லும் விவசாயிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே காலை 6.45 மணிக்கு செல்லக் கூடிய தனியார் பஸ்சும் இயக்குவது இல்லை. இதனால் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய மலை வாழ் மக்களுக்கு சிரமமாக உள்ளது. அரசு பஸ் ஒன்று இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், ஜமுனாமரத்தூர். 

மேலும் செய்திகள்