விரைவு பஸ்கள் போளூருக்குள் வந்து செல்ல வேண்டும்

Update: 2023-08-23 16:56 GMT

திருவண்ணாமலையில் இருந்து போளூருக்கு அல்லது வேலூரில் இருந்து போளூருக்கு இரவு நேரங்களில் வரும் அனைத்து விரைவு பஸ்களும் பைபாஸ் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. அதேபோல் திருவண்ணாமலையில் அல்லது வேலூரில் இருந்து போளூருக்கு டிக்கெட் கேட்டால் போளூரில் பஸ் நிற்காது எனக் கூறுகின்றனர். இதனால் நள்ளிரவில் போளூர் வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே போளூர் வழியாக செல்கின்ற அனைத்து விரைவு பஸ்களும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்.

-திருமால்சுந்தரம், போளூர்.

மேலும் செய்திகள்