போளூரில் கடந்த 7 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடந்தன. இதனால், இரவில் போளூர் வழியாக செல்லும் அனைத்து விரைவு பஸ்களும் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்றன. தற்போது மேம்பாலப் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. போளூர் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் முயற்சியால் ஒருசில பஸ்கள் மட்டும் பகலில் நகருக்குள் வந்து செல்கின்றன. அதே நேரம் இரவில் விரைவு பஸ்கள் உள்ளிட்ட அனைத்துப் பஸ்களும் போளூக்கு உள்ளே வந்து செல்ல வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துசாமி, போளூர்.