வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் சேகரித்த குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது காற்றில் குப்பைகள் பறக்கிறது. இது, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. குப்பைகளின் மேல் வலை, துணி விரித்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், வேலூர்.