போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-06-18 13:40 GMT

போளூர் பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் மற்றும் பஜாருக்கு செல்லும் முக்கிய வழியான அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை தெரு போன்ற இடங்களில் கடைக்கு செல்பவர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை வழியிலே விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை உடனடியாக காவல்துறை கவனிக்க வேண்டும்.

-அரசு, போளூர்.

மேலும் செய்திகள்