ஆபத்தான பயணம்

Update: 2023-12-24 16:49 GMT

ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம், மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லும் சாலையில் குறைந்த எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களின் பின்னால் உள்ள ஏணியில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மேற்கண்ட மார்க்கத்தில் காலை, மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஞானபிரபு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்