ஆபத்தான பயணம்

Update: 2023-06-14 17:11 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். அதிலும், ெபண்களை தங்கள் அருகிலேயே அமர வைத்துக் கொண்டு டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். இது, பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் இது ஆபத்தான பயணமும் கூட. ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றுவதைப் போக்குவரத்துத்துறையினரும், போலீசாரும் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜாகீர், தூசி.

மேலும் செய்திகள்