கந்திலியை அடுத்த கிருஷ்ணகிரி மெயின் ரோடு அருகில் உள்ள ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் மூடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி மாங்குப்பம் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். லாரிபோன்ற கனரக வகனங்கள் வரும்போது மற்ற வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. குளம்போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் இரவு நேரத்தில் வுபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கால்வாயை சீரமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.