சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்

Update: 2025-08-11 10:57 GMT

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு புறவழிச்சாலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் தானியங்கி போக்குவரத்துச் சிக்னல் கருவி பொருத்தப்பட்டிருந்த கம்பம் 2 மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்து விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலீசாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சோலார் தானியங்கி போக்குவரத்து சிக்னல் கருவியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- மோகன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்