வாலாஜாவுக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

Update: 2022-09-01 09:38 GMT

வாலாஜா பஜாரில் கடும் மக்கள் நெரிசல் காரணமாக சென்னை மற்றும் காஞ்சீபுரம் பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாலாஜா பஜார் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து செல்ல முடியவில்லை, தெருவோர கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால் தற்போது வாலாஜாவில் வெளியூர் பஸ் உள்ளே நுழையாமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். வாலாஜாவுக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து ெசல்ல போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகோரமூர்த்தி, வாலாஜா.

மேலும் செய்திகள்

பஸ் வசதி