பஸ்கள் நின்று செல்ல ேவண்டும்

Update: 2023-06-07 13:38 GMT

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், புதுசேரி, வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து அரக்கோணம் அடுத்த நாகாலம்மன் நகர் வழியாக திருத்தணி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி வரை செல்லும் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இந்தப் பகுதியில் இரவு 6 மணிக்கு மேல் ஆட்டோ சேவையும் கிடையாது. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், நாகாலம்மன் நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி