பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-05-07 17:10 GMT

திருப்பத்தூர் அரசினர் தோட்டம் பகுதியில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், நகராட்சி, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது சாலையின் நடுவே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பஸ்களும் இப்பகுதியில் நின்று செல்வதில்லை. எனவே அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்