பஸ்கள் நேர அட்டவணை வைக்க வேண்டும்

Update: 2022-08-24 13:18 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதை, அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை முத்துக்கடை வழியாக செல்லும் அனைத்துப் பஸ்கள் புறப்படும் நேரம், வரும் நேரம் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கால அட்டவணை பட்டியலை எழுதி வைக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் பஸ்களை பயன்படுத்த வசதியாக இருக்கும். சம்மந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கஜேந்திரரெட்டி, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்