பஸ் நிலையம் வழியாக பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

Update: 2022-10-09 11:52 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையால் வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் வந்து செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்லும் பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துகள் நடைபெறுவது உண்டு. இதனால் வெளியூர் செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியூர் செல்லும் அனைத்துப் பஸ்களும் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இல.குருசேவ். கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்