பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

Update: 2024-04-21 16:05 GMT

போளூரில் மேம்பாலப் பணி நடப்பதால் இரவில் அனைத்துப் பஸ்களும் பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. விரைவு பஸ்களும் இரவில் உள்ளே வருவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வேலூரில் இருந்து திருவண்ணாமலை அல்லது திருவண்ணாமலை இருந்து வேலூர் செல்லும் அனைத்துப் பஸ்களும் இரவில் போளூர் பேரூராட்சி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும்.

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்