பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள்

Update: 2023-05-24 13:34 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் அங்குள்ள கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி