பயணிகள் அவதி

Update: 2023-12-03 17:53 GMT

பயணிகள் அவதி

திருப்பூர் முதல் கோவை வரை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் அவினாசி மற்றும் தெக்கலூர் பகுதிக்கு செல்லாமல் கோவை செல்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வயதானவர்கள், சிறுவர், சிறுமிகளுடன் பயணம் செய்பவர்கள் பஸ் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் முன்பு சென்றதை போல இயக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுமுகம், அவினாசி.

மேலும் செய்திகள்