அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

Update: 2025-06-29 19:25 GMT

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், கல்பாக்கம், திருத்தணி ஆகிய ஊர்களுக்குச் செல்ல புதிய பஸ் நிலையத்துக்கு வந்து தான் பஸ் ஏற வேண்டும். ஆனால், இப்பகுதிகளில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குச் செல்ல நேரம் மற்றும் பண விரயம் ஆகிறது. அதனாலேயே பலர் புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லாமல் வள்ளலார், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் பஸ்சுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த வழியாகப் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் சத்துவாச்சாரி, வள்ளலார் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றுவது இல்லை. ஆனால், பஸ்கள் காலியாகச் செல்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுத்து சத்துவாச்சாரி, வள்ளலார் நிறுத்தங்களில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.வெங்கடராமன், வள்ளலார்.

மேலும் செய்திகள்