கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2022-09-29 10:16 GMT

அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம் என்பதைத் தொடர்ந்து, பெண்களுக்கும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. பணம் கொடுத்துப் பயணம் செய்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி, திருவலம் உள்பட பல இடங்களில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் உரிய நேரத்தில் வீட்டுக்குச் செல்ல கிடைத்த பஸ்களில் இடம் கிடைக்காதபோது, படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-ராமராவ், குடியாத்தம்.

மேலும் செய்திகள்