கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-09-25 09:35 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு செல்வதற்கு திருப்பத்தூரில் இருந்து போதுமான பஸ் வசதி கிடையாது. ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டுமே செல்வதால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தினமும் கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளையில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

-எஸ்.கவுதம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி